Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமர் திடீர் ராஜினாமா! பெரும் பரபரப்பு

பிரதமர் திடீர் ராஜினாமா! பெரும் பரபரப்பு

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றார். இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது

அதே போல் சற்றுமுன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை புதிய அதிபருக்கு அனுப்பியுள்ளதாகவும் அதிபர் கோத்தபய ராஜபக்சே அவர்களும் அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகவும் இலங்கையில் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

மேலும் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் ரணில் விக்கிரமசிங்கே தனது ராஜினாமாவிற்கான காரணங்களை தெரிவிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இலங்கையில் புதிய பிரதமராக அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் சகோதரரும் முன்னாள் அதிபருமான மஹிந்தா ராஜபக்சே பதவியேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Exit mobile version