Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவால்! அதிர்ந்துபோன உதயநிதி!

திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிலரை திமுக தலைவர் ஸ்டாலின் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன அவர்களின் பின்னணி விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மாவட்ட நிர்வாகிகளை நேராக வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் உரையாடி வருகிறார். மண்டல வாரியாக நிர்வாகிகளை கூப்பிட்டு பொதுவாக பேசும் மு க ஸ்டாலின் பின்பு அவர்களின் கருத்துகளை கேட்டு இருக்கின்றார்.

ஒருகட்டத்தில் சில நிர்வாகிகளை அவரே தனியாக கூப்பிட்டு கட்சி நடவடிக்கைகள், மற்றும் செயல்பாடுகள், சம்மந்தமாக விசாரித்திருக்கிறார். அப்போது பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் இளைஞர் அணியினர் எல்லை மீறி செல்கிறார்கள் என்று புகார் கூறியிருக்கிறார்கள்.

திருச்சி, தஞ்சை, போன்ற நகரங்களில் இளைஞரணி நிர்வாகிகள் பற்றி அந்த மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகளிடம் புகார் அளித்து இருக்கிறார்கள் இளைஞரணி பொறுப்புகளுக்கு தமிழகம் முழுவதுமே வசூல் வேட்டை நடைபெற்றது ஸ்டாலின் கவனத்திற்கு சென்று உள்ளது.

எல்லா மாவட்டங்களில் இருந்தும் இளைஞர் அணியின் மீது புகார்கள் வந்திருக்கின்றன. இதனை தொடர்ந்து இளைஞர் அணியை கட்டுப்பாட்டுடன் வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்ததாக தெரிகிறது உதயநிதிக்கு நெருக்கமான நிர்வாகிகளை ஸ்டாலினால் கூட ஒன்றும் செய்ய இயலாது என்று கூறுகிறார்கள் .

இதையெல்லாம் கேட்ட ஸ்டாலின் இளைஞரணி கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் என்று உதயநிதியிடம் அறிவுரை கூறியிருக்கிறார் என்று பரவலாக பேசப்படுகிறது.

Exit mobile version