Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீராத பொடுகு தொல்லையால் அவதியா? இதை அரைத்து தடவினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்!!

Suffering from never-ending dandruff? Grind it and apply it for a permanent solution!!

#image_titleSuffering from never-ending dandruff? Grind it and apply it for a permanent solution!!

தீராத பொடுகு தொல்லையால் அவதியா? இதை அரைத்து தடவினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்!!

தலை முடியை முறையாக பராமரிக்க தவறினால் தலையில் பொடுகு தொல்லை,முடி உதிர்தல்,நரை முடி பிரச்சனை,அரிப்பு,முடி வறட்சி ஆகியவை ஏற்படும்.இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கேரட் + தயிர் பேக் பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கேரட்
2)தயிர்
3)வெந்தயம்

செய்முறை:-

முதலில் ஒரு கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு மிதமான தீயில் 1 நிமிடம் வறுக்கவும்.இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் 1 கிளாஸ் தயிர் ஊற்றி அரைத்த வெந்தயப் பொடி சேர்த்து கலந்து விடவும்.அதன் பின்னர் அரைத்த கேரட் விழுதை சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு கலக்கி கொள்ளவும்.

இந்த கேரட் பேஸ்டை தலை முழுவதும் முடிகளின் வேர் பகுதியில் படும்படி அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

பிறகு ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் தலையில் உள்ள பொடுகு அடியோடு நீங்கும்.இனி பொடுகு தொல்லை ஏற்படாமல் இருக்கும்.

Exit mobile version