Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை விலை உயர்கிறதா?

2018 -2019 சந்தை பருவத்தில் அக்டோபர் முதல் செப்டம்பர் மாதம் வரை 37 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. என மத்திய அரசு தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன உள்நாட்டில் இருந்து மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் இந்த மாநிலங்களின் பங்கு மட்டும் 70 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலம் சர்க்கரை சந்தை பருவமாகும் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 2018 19 பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 20 சதவீதம் அதிகரித்து 3.3 கோடி கோடி டன்னாக எட்டியது இருக்கிறது பொதுவாக வங்கதேசம் இலங்கை சோமலிய நாடுகள் இந்தியாவில் இருந்து அதிக அளவில் சர்க்கரை இறக்குமதி செய்து வருகின்றன கடந்த பருவத்தில் இந்திய ஆலைகளுக்கு 50 லட்சம் டன் வரை சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

2018 -19 பருவத்தில் 37 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப் பட்டிருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார் நடப்பு

2019-20 பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 21.5 சதவீதம் குறைந்து 2.6 கோடி டன்னாக இருக்கும் என இஸ்மா முன்னறிவிப்பு செய்துள்ளது. நடப்பு பருவத்தில் நவம்பர் 30 நிலவரப்படி நாட்டில் மொத்தம் 18.85 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி அதிகரித்து உள்ளதாக தெரிவித்து இருக்கிறது.

சென்ற ஆண்டு இதே நாளில் 40.69 லட்சம் கோடி டன்னாக இருந்தது உற்பத்தி 54 சதவீதம் சரிவடைந்துள்ளது நம் நாட்டில் சர்க்கரை நுகர்வு ஆண்டுக்கு சுமார் 2.5 கோடி டன்னாக உள்ளது குளிர்பான நிறுவனங்கள் பேக்கரி பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனங்கள் ஓட்டல்கள் மட்டுமே அதிக அளவு சர்க்கரையை பயன்படுத்துகின்ற என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version