Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

படுதோல்வி படம் கொடுத்த இயக்குனரோடு மீண்டும் இணைகிறாரா சூர்யா? கோலிவுட்டில் பரவும் தகவல்!

படுதோல்வி படம் கொடுத்த இயக்குனரோடு மீண்டும் சேர்கிறாரா சூர்யா? கோலிவுட்டில் பரவும் தகவல்!

சூர்யா லிங்குசாமி கூட்டணியில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அஞ்சான்.

சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் இணையத்தில் பயங்கரமாக ட்ரோல்களை சந்தித்தது. அதிகளவில் ஒரு தமிழ்ப்படம் ட்ரோல் செய்யப்பட்டது அஞ்சான் படத்துக்காகதான் இருக்கும்.

இந்த படத்தின் தோல்விக்குப் பின் இயக்குனர் லிங்குசாமி சில வருடங்கள் படமே இயக்காமல் இருக்கவேண்டிய சூழல் இருந்தது. படத்தை அவரே தயாரித்திருந்ததால் பொருளாதார ரீதியாகவும் நஷ்டத்தை சந்தித்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய சண்டக்கோழி 2 திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதையடுத்து தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் ரிலீஸாகும் தி வாரியர் என்ற திரைப்படத்தை ராம் பொத்தினேனி என்ற தெலுங்கு ஹீரோவை வைத்து இயக்கியுள்ளார். இந்த படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் இந்த பட ரிலீஸுக்குப் பின்னர் மீண்டும் லிங்குசாமி முன்னணி இயக்குனராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா, லிங்குசாமியிடம் மீண்டும் ஒரு படம் இணைந்து பண்ணலாம் என நம்பிக்கைக் கொடுத்துள்ளதாக தகவல்கள் பரவுகின்றன. அஞ்சான் தோல்விக்குப் பின்னர் உடனடியாக இருவரும் இணைந்து படம் பண்ண உள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version