Breaking: நாளை தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது!!

0
119

Breaking: நாளை தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது!!

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் முன்னிலையில் இன்று காலை 11 மணி அளவில் போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஒப்பந்தம் தொடர்பாக 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கின்றது.

இந்த பேச்சுவார்த்தையில் தொ.மு.ச. அண்ணா தொழிற்சங்க பேரவை, சிடிஐயூ உள்ளிட்ட 67 நிர்வாகிகள் கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஒருவேளை இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தால் ஓட்டுநர்கள்,நடத்துனர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.