Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாடு அரசின் விருது!! 10 அறிஞர்களுக்கு வழங்கி கௌரவம் முதல்வர் ஸ்டாலின்!!

Tamil Nadu Govt Award!! Chief Minister Stalin honored 10 scholars!!

Tamil Nadu Govt Award!! Chief Minister Stalin honored 10 scholars!!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் வள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர், 2025-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பெரும் புலவர் மு. படிக்கராமுவுக்கு மற்றும் 2024-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது விடுதலை க. இராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் விருதுகள், தமிழ் வளர்ச்சித் துறையின் ஏற்பாட்டில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டன. இந்த விழாவில், தமிழ் மொழி மற்றும் சமூக முன்னேற்றத்தில் சிறந்து விளங்கிய 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகள் பெற்றவர்கள்:

திருவள்ளுவர் விருது: திரு. இரணியன் நா.கு.பொன்னுசாமி

பேரறிஞர் அண்ணா விருது: திரு. சி.நா.மீ. உபயதுல்லா

பெருந்தலைவர் காமராசர் விருது: திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மகாகவி பாரதியார் விருது: முனைவர் ஆ.இரா. வேங்கடாசலபதி

பாவேந்தர் பாரதிதாசன் விருது: திரு. வல்லவன்

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது: நாமக்கல் திரு. பொ. வேல்சாமி

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது: கவிஞர் மு. மேத்தா

தேவநேயப்பாவாணர் விருது: முனைவர் இரா. மதிவாணன்

தந்தை பெரியார் விருது: கவிஞர் கலி. பூங்குன்றன்

டாக்டர் அம்பேத்கர் விருது: திரு. எஸ்.வி. ராஜதுரை

இவ்விருதுகள், தமிழ் மொழி, இலக்கியம், சமூக நீதி மற்றும் சமூக முன்னேற்றத்தில் முக்கிய பங்களிப்பைச் செய்தவர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டன. விருதாளர்களுக்கு தங்கப் பதக்கம், காசோலை, தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Exit mobile version