Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பங்குச்சந்தையில் டி.சி.எஸ் நிறுவனம் புதிய சாதனை !!

2020 நடப்பாண்டிற்கான ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், வலுவான வருவாய் கிடைக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டாட்டா கன்சல்டிங் சர்வீஸ் (டி.சி.எஸ்) பங்குகள் திரும்ப வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பங்கு சந்தையில் இன்று முதலீல் டாடா நிறுவனம் தனது உச்சத்தை அடைந்தது.

இன்று காலை நிலவரப்படி தேசிய பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் மும்பை பங்குச் சந்தையின் நிப்டி உயர்வுடன் தொடங்கியது. நிப்டி குறியீட்டு எண் 20,677 ஆக உயர்ந்து இருந்தது. இந்த உயர்வானது 2.8 சதவீதம் அதிகரித்து 20,748  ஆக இருந்தது.

இதனால் மும்பை குறியீடு NSE -யில் 1.2% உயர்வை பெற்றுள்ளது. இதனால் டி.சி.எஸ் பங்குகளில் 7.23 சதவீதம் உயர்ந்து 2,728.10 எட்டியுள்ளது.

இதனால் இன்று டிசிஎஸ் நிறுவனமானது, முதல் முறையாக பத்து ட்ரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version