Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! மாணவர்கள் மகிழ்ச்சி!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..?

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! மாணவர்கள் மகிழ்ச்சி!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..?

இந்தியாவில் நாளை தேசிய ஊரடங்கு உத்தரவு இருப்பதன் தொடர்ச்சியாக இன்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைப்பதாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்
27.03.20 முதல் 13.04.20 வரை நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படும்.

இத்தேர்வுகள் தமிழ் புத்தாண்டு தினத்திற்கு பிறகு அதாவது 15.04.20 அன்று தொடங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது நடத்து வருகின்றன.
11 ஆம் வகுப்பிற்கு 23.03.20 மற்றும் 26.03.20 அன்று நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளும் 12 ஆம் வகுப்பிற்கு 24.03.20 அன்று நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதை பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version