Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இப்படி செய்து விட்டாரே நம்ம தல அஜித்! ஏன் என்ன காரணம்?

தல என்றால் அனைவரும் அறிந்ததே. அஜித் என்ற ஒற்றை மனிதரை தமிழ் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் என்றும் மறக்கமாட்டார்கள். அவருக்கே தனி ஒரு குணம் உண்டு அவர் பல தோல்வி வெற்றி படங்களை கொடுத்தாலும் அவருடைய தன்னம்பிக்கை அவரை விட்டுகொடுத்தது இல்லை என்பதே உண்மை.

தல அஜித்தின் நடிப்பில் முன்னதாக வெளிவந்த விஸ்வாசம் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மெகா வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து H.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் அஜித் தனது ரசிகர்களுடன் இன்று செல்பி எடுத்துகொண்டுள்ளார்.

இதுவரை ரசிகர்களே அஜித்தை பொதுவெளியிலோ அல்லது நிகழ்ச்சிகளிலோ புகைப்படம் எடுத்துவந்த நிலையில் முதன்முறையாக ரசிகர்கள் அனைவரையும் க்ரூப்பாக நிற்க வைத்து செல்பி எடுத்து கொண்டுள்ளார் நமது தல.

ஆனால் இதிலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது அஜித்திடம் பேஸிக் மொபைல் தான் உள்ளதாக அவரது ரசிகர்கள் இந்நாள் வரை கூறி வருகின்றனர். அப்படியென்றால் இந்த மொபைல் எப்படி வந்தது? என மற்ற ரசிகர்கள் கேள்வி எழுப்ப, இது லக்கி ரசிகன் சந்தோஷ்ராஜ் என்பவரின் மொபைல் போனாம்.

எது என்னவோ தலையே நம்மை வைத்து ஒரு செல்ஃபி எடுத்து விட்டார் என்பதில் பெரும் சந்தோசத்தில் உள்ளன அவரது ரசிகர்கள். முந்தைய படம் விஸ்வாசம் போலவே வினோத் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் நேர்கொண்ட பார்வையும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Exit mobile version