சிவாஜி சொன்ன அந்த வார்த்தை… – சச்சு வாழ்க்கையை மாற்றிய மேஜிக்…!

0
70
#image_title

சிவாஜி சொன்ன அந்த வார்த்தை… – சச்சு வாழ்க்கையை மாற்றிய மேஜிக்…!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பழம் பெரும் நடிகை சச்சு. இவர் தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். நடிகை சச்சு ‘ராணி’, ‘தேவதாசு’, ‘மாயா பஜார்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

சின்ன வயதிலிருந்தே சச்சுக்கு சினிமா மீது அதிக ஆர்வம். அது மட்டுமல்லாமல் நன்றாக பரதநாட்டியமும் ஆடுவார். பல மேடைகளில் பரதநாட்டியம் அரங்கேற்றியுள்ளார். ஒருமுறை தன் சகோதரியுடன் சச்சு மேடையில் பரதநாட்டியம் ஆட, அதை இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் பார்த்து ரசித்துள்ளார். உடனே சச்சுவை பார்த்து அழைத்து, மறுநாள் தன் அலுவலகத்திற்கு வரும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார்.

மறுநாள் சச்சு அவரைப் பார்க்க, அவர் மூலம் கிடைத்த ‘வீரத்திருமகன்’ படத்தின் மூலம் முதல்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் சச்சுவுக்கு ஜோடியாக நடிகர் ஆனந்தன் நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘ரோஜா மகளே ராஜகுமாரி’ பாடல் இன்று வரை அனைவரைக்கும் மிகவும் பிடிக்கும்.

ஆனால், இப்படம் தோல்வி அடைந்தது. இதனால் மனம் சோர்ந்து விடாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்று சச்சு நினைத்தாராம்.

ஒருமுறை சிவாஜியை சச்சு சந்தித்தபோது, படம் தோல்வி அடைந்தால் என்ன, உனக்கு இன்னும் சினிமாவில் நடிக்க வயது இருக்கிறது. பொறுமையாய் இரு என்று கூறிவிட்டு சென்று விட்டாராம். அந்த ஒரு வார்த்தை சச்சுக்கு மனதில் சந்தோஷத்தை கொடுத்துவிட்டது.

இதன் பின்னர், ‘காதலிக்க நேரமில்லை’, ‘பாமா விஜயம்’, ‘உரிமைக் குரல்’ போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன. இன்று வரை சச்சு வயதானாலும் இளமையோடு காணப்படுகிறார்.