ஆறாவது படிக்கும் மாணவிக்கு மதிப்பெண் கொடுக்க ஆசிரியர் செய்த கொடுமை!

0
131
The cruelty done by the teacher to give a mark to the sixth grade student!

ஆறாவது படிக்கும் மாணவிக்கு மதிப்பெண் கொடுக்க ஆசிரியர் செய்த கொடுமை!

காலம் எங்குதான் போகிறது? யாரைதான் நம்புவது? என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பள்ளியும், ஆசிரியர்களுமே தற்போது பெற்றோர்களின் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி நிற்கின்றனர்.

சென்னையில் ஒரு பள்ளியில் ஆரம்பித்த குற்றச்சாட்டு பல பள்ளிகள், விளையாட்டு ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் என அனைத்து துறையிலும், மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்ந்து வெளி வந்து கொண்டு இருக்கிறது.

கல்வியை போதிக்கும் ஆசான்களே இப்படி இருந்தால் நாளை வளரும் தலைமுறையினர் எப்படி இருப்பர்களோ என்ற அச்சம் அனைத்து பெற்றோர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. இதேபோல் வட மாநிலத்திலும் ஒரு குழந்தைக்கு அநீதி நடந்துள்ளது.

13 வயதான சிறுமி ஒருவர், ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஷெர்கர் தெஹ்ஸில் உள்ள மொகம்கர் பகுதியில் வசித்து வந்துள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவிக்கு சூரஜிராம் மற்றும் சாஹிராம் என்ற ஆசிரியர்கள் இருந்தனர்.

இந்நிலையில் அந்த மாணவிக்கு பரிட்சையில் அதிக மதிப்பெண் போடுவதாக கூறி, அந்த மாணவியை ஆசிரியர் சூரஜிராம் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் பதறி போன அந்த மாணவி கத்தி சத்தம் போட்டதும் அந்த ஆசிரியர் அந்த மாணவியிடம் சத்தம் போட்டால் இதே வகுப்பில் தோல்வியடைய செய்வேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்த அந்த மாணவியை அந்த ஆசிரியர் பலமுறை தொடர்ந்து  பலாத்காரம் செய்து அந்த குழந்தை கர்ப்பமாக்கியுள்ளார். பின்னர் அந்த பெண் வயிற்று வலியால் துடித்த போது அந்த சிறுமியின் பெற்றோர் அந்த மாணவியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியிடம் நடந்ததை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு அந்த ஆசிரியர் மீது போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அந்த ஆசிரியர் சூரஜிராம் மற்றும் உடந்தையாக இருந்த அவரது சக ஆசிரியர் சாஹிராம் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் ஆசிரியர்களை தேடி வருகின்றனர்.