வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி சடலமாக மீட்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…
திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை ஈஸ்வரன் கோவில் பத்து மெயின் ரோட்டை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் காளியப்பன் வயது 55. இவர் நேற்று வரக்கூர் பாதையில் நெல் வயல்ஒன்றை குத்தகைக்கு வாங்கி இருந்தார். தனது பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற எண்ணத்தில் குத்தகைக்கு வாங்கிய நிலத்திற்கு சென்றார்.
அப்போது அருகிலுள்ள மணத்திடலை சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான மின் மோட்டார் அறைக்கு சென்றுள்ளார்.அங்கு உள்ளே இருந்த மோட்டார் பட்டனை அழுத்தினார். பட்டனை தொட்டதும் எதிர்பாராத விதமாக மின்சாரம் கண்ணப்பன் மீது பாய்ந்தது. இதனால் கண்ணப்பன் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளார்.அங்கு கீழே கிடந்தவரை அங்கு சென்று கொண்டிருந்த அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின் உடனடியாக கண்ணப்பனை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து இவரது மகன் கலையரசன் திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார்.
எஸ்.ஐ அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயிர்களுக்கு தண்ணி பாய்ச்ச சென்ற விவசாயி பரிதாபமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.