போலி நகை அடமானம்!! மோசடி வழக்கில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் டிஸ்மிஸ்!

0
194
#image_title

போலி நகை அடமானம்!! மோசடி வழக்கில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் டிஸ்மிஸ்!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் போலி நகை அடமானம் வைத்து மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெரோமை பணி நீக்கம் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த மாதம் வங்கிகள் மற்றும் தனியார் அடமானக் கடைகளில் செம்பு கலந்த போலி நகைகள் அடமானம் வைத்து மோசடி செய்ததாக காரைக்கால் நகர காவல் நிலையத்திற்கு புகார் வந்தது இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியதில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெரோம் மற்றும் அவரது காதலி புவனேஷ்வரி தலைமையிலான கும்பல் போலி நகைகளை அடமானம் வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் ஜெரோம் மற்றும் அவரது காதலி புவனேஷ்வரி உள்ளிட்ட இவ்வழக்கில் தொடர்புடைய 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலி நகை அடமானம் வைத்த மோசடி வழக்கில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெரோமை பணி நீக்கம் செய்து காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது மேலும் ஜெரோம் தற்போது சிறையில் உள்ள நிலையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சிறைதுறையிடம், காவல்துறையினர் அளித்துள்ளனர்.

போலி நகை மோசடி வழக்கில் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.