Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளுத்து வாங்கப்போகுது மழை! இந்த 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

Rain in 7 districts in Tamil Nadu for next 3 hours! Meteorological Center information!

Rain in 7 districts in Tamil Nadu for next 3 hours! Meteorological Center information!

வெளுத்து வாங்கப்போகுது மழை! இந்த 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் சில  மாவட்டங்களில் சாரல் மழை பெய்ந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பில், நாளை மறுதினம் வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் குறிப்பாக ராணிப்பேட்டை , வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சேலம்,  தர்மபுரி,  நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி,  திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர்,கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் காலையிலிருந்து வானம் மேகமமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது நுங்கம்பக்கம் , கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் தற்பொழுது மழை பெய்ந்து வருவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

Exit mobile version