Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் கொளுத்தும் கோடை வெயில்! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

#image_title

தமிழகத்தில் கொளுத்தும் கோடை வெயில்! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழ்நாட்டில் வருகின்ற இரண்டு நாட்களுக்கு வெப்பநிலையானது 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்பொழுது கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வருகிறது. மக்கள் வெளியில் கூட செல்ல முடியாத அளவு வெயில் வாட்டி வருகிறது. காலை 8 மணிக்கு சுட்டெரிக்கும் மெயில் மாலை 5 மணி வரை தனது உக்கிரத்தை காட்டி வருகிறது.

கொடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறவே அஞ்சுகின்றனர். வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள இளநீர், தர்பூசணி, நுங்கு, மற்றும் குளிர்பான கடைகளில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வெயில் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமானது தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் என வானிலை மையமானது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Exit mobile version