டியூசனுக்கு சென்ற மாணவன் பெட்ரோல் ஊற்றி  உயிருடன் எரித்துக் கொலை! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்! 

0
249
#image_title

டியூசனுக்கு சென்ற மாணவன் பெட்ரோல் ஊற்றி  உயிருடன் எரித்துக் கொலை! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்! 

படிப்பதற்காக டியூஷன் சென்ற மாணவனை வழிமறித்த கும்பல் உயிருடன் அவனுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சியான நிகழ்வு ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கு பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டான்.

இந்த கொடூர சம்பவத்தில் தீக்காயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவன் மீட்கப்பட்டு குண்டூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். எனினும் தீக்காயத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டதால் அவனை காப்பாற்ற முடியவில்லை.  அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

முதல் கட்ட போலீஸ் விசாரணையில் மாணவனின் பெயர் செருக்கு பள்ளியை சேர்ந்த அமர்நாத் என்பதும், அவன் டியூஷன் சென்று கொண்டிருந்த பொழுது மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டதும் தெரியவந்தது. வெங்கடேஸ்வர ரெட்டி, அவருடன் இன்னும் இரண்டு பேர் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக அந்த மாணவன் மரண வாக்குமூலம் அளித்துள்ளான்.

இறந்து போன மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதத்தினால் தீ வைக்கப்பட்டாரா? அல்லது மாணவர்களுக்கு இடையேயான தகராறில் கொளுத்தப்பட்டாரா?  என்ற வகையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் முதல்கட்ட விசாரணையில் அந்த மாணவனின் சகோதரியை சிலர் கிண்டல் செய்துள்ளனர். அதனை இந்த மாணவன் தட்டி கேட்கவே ஆத்திரமடைந்த கும்பல் அந்த மாணவன் சைக்கிளில் டியூசன் செல்லும் பொழுது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.