Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர்! ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு!

A young man was killed in a collision with a standing vehicle! Police investigation!

A young man was killed in a collision with a standing vehicle! Police investigation!

ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர்! ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி அம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(36).  இவர் நேற்று ஈரோட்டில்லிருந்து சத்தியமங்கலம் செல்லும் தனியார் பேருந்தில் ஆப்பக்கூடல் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். அப்போது அவர் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.

அப்போது அந்த பேருந்தானது ஆப்பக்கூடல் ஏறி வளைவில் சென்று கொண்டிருந்த போது சுரேஷ் நிலை தடுமாறி பேருந்தின் பின்பக்க படிகட்டில்லிருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அவருக்கு தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.இதனையடுத்து   அக்கம் பக்கத்தினர் சுரேஷ்யை மீட்டு ஆப்பக்கூடல் விஎம்கே மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு ஒன்பது மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் இந்த விபத்து குறித்து அவருடைய மனைவி போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆப்பகூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version