மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் ! போலீஸார் விசாரணை !

0
127
The teenager who gave love to the student! Police investigation!

மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் ! போலீஸார் விசாரணை !

சேலத்தில் சட்டக்கல்லூரி  மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்தவரை போலீஸார் கைது செய்தனர். திருப்பூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி பலரும் படித்து வந்துள்ளனர் . மேலும்  மாணவி ஒருவர், அதே கல்லூரியில்  படித்து வந்தார். அந்த மாணவியுடன், திருப்பூரை சேர்ந்த ரகுமான்கான் என்பவரும் படித்து வந்தார். இதற்கிடையே ரகுமான்கான் அந்த மாணவியிடம் உன்னை நான் காதலிக்கிறேன் என்று கூறினார்.

அப்போது அந்த மாணவி மறுத்து விட்டாதாக தெரியவந்தது .மேலும் அந்த மாணவன் தொடந்து  தன்னை காதலிக்கும்படி அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைதொடர்ந்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரகுமான்கானை கைது செய்தனர். மேலும் அவர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.