யூடியூப் பார்த்து காதலனுக்காக பெண் செய்த காரியம்! அதிர்ச்சியில் பெற்றோர்!

0
107

யூடியூப் பார்த்து காதலனுக்காக பெண் செய்த காரியம்! அதிர்ச்சியில் பெற்றோர்!

இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் பலர் ஆண்ட்ரைடு மொபைலில் மூழ்கி விடுகின்றனர்.அதன் விளைவாக பல கொலை,கற்பழிப்பு போன்றவை நடக்கிறது.முகம் தெரியதா நபர்களிடம் பேசி தங்கள் புகைப்படங்கள் அனுப்பி,அவர்கள் அந்த புகைப்படத்தினை தவறாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.சில இந்த ஆண்ட்ரைடு செல்போனை நல்ல காரியங்களுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.ஆனால் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துபவரை விட தீய காரியங்களுக்காக பயன்படுத்துபவர்கள் தான் அதிகம்.

அதுமட்டுமின்றி உலகின் உள்ள அனைத்தையும் ஓர் கைகுள்ளையே இந்த ஆண்ட்ரைடு அடக்கிவிடுகிறது.அதுமட்டுமின்றி மக்கள் தங்களுக்கு தெரியாத பலவற்றை கற்றுக்கொள்ள யூடியூப் போன்றவற்றை பார்த்து தெரிந்து கொள்கின்றனர்.அந்தவகையில் பலர் யூடியூப் பார்த்து கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பது போன்ற செய்திகள் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.அதனையடுத்து தற்பொழுது நடைபெற்ற செயல் அனைவரையும் மனதை பதறவைக்கும் அளவிற்கு உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பபூரை அடுத்து யசோத என்ற பகுதி உள்ளது.அந்த பகுதியில் ஓர் பெண் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.அதே தெருவை சேர்ந்த ஷோயப் கான் என்ற நபர் அந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.முதலில் ஒருதலை காதலாக இருந்தது,நாளடைவில் இருவரும் மனம் ஒத்து காதலிக்க ஆரம்பித்துவிட்டனர்.இவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.ஆனால் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

இவர்களும் காதலித்து வந்த நேரத்தில் ஷோயப் கான் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இந்த தொல்லையானது கடந்த 5 ஆண்டுகளாகவே நடந்து வந்துள்ளது.தற்போது அந்த பெண் கர்பமாக இருந்து வந்துள்ளார்.வீட்டில் தெரிந்தால் பிரச்சனைகள் ஏற்படும் என்று எண்ணி அந்த பெண்  யாரிடமும் கூறவில்லை.அதனால் அந்த பெண்மணி கருகலைப்பு எப்படி நடக்கும் என்பது போன்ற செய்திகளை யூடியூப் மூலம் அறிந்து அந்த யூடியூபில் கூறியதைப் போலவே செய்துள்ளார்.அதன் பக்க விளைவுகள் அவருக்கு அதிகமாகியுள்ளது.

கருகலைப்பை தானே செய்ததால் இவரது உடல் நலம் அதிகளவு மோசமடைந்துள்ளது.பிறகு இவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளனர்.மருத்துவர்கள் கருகலைப்பு நடந்துள்ளது என்று கூறியதை கண்டு அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதனையடுத்து அவரது பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் கான் மீது பாலியல் கொடுமை என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.பெற்றோர்கள் அன்றாடம் தனது குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும்.அதுமட்டுமின்றி இவ்வாறு அனைத்து செயல்களையும் யூடியூப் மூலம் கண்டறிந்து இவர்களே செய்து கொள்வதன் மூலம் உயிர் போகும் அபயாமும் ஏற்படலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.