ஒன்றாக மது அருந்திய நிலையில் செல்போன் அழைப்பினால் ஏற்பட்ட விபரீதம்!
கணவன் மனைவிக்குள் என்ன ஒரு ஒற்றுமை, ஒன்றாக அமர்ந்து குடிக்கும் அளவுக்கு, ஆனால் என்ன செய்வது சந்தேகத்தினால் மனைவியை கொலை செய்யும் அளவுக்கு ஆத்திரம் எதற்கு? பொறுமையாக பேசி தீர்த்தால் தீராத பிரச்சனை இருக்குமா? என்று யோசித்து பிறகு நல்ல முடிவாக எடுங்கள்.
விகாஸ் என்ற நபர், உத்தரபிரதேச மாநிலம் மீரட் அடுத்த பிரம்ஹாபுரி பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு டெல்லியைச் சேர்ந்த நேஹா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி பிரம்ஹாபுரியில் வசித்துவந்ததை அடுத்து, கணவன் மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, நேஹாவின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்தது.
எதிர்முனையில் பேசிய நபரிடம், மனைவி நேஹா கொஞ்சி கொஞ்சி பேசினார். இதனால், சந்தேகமடைந்த விகாஸ், போனில் பேசிய நபருடனான உறவு குறித்து கேள்வி எழுப்பியதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து, நேஹாவின் கழுத்தில் விகாஸ் குத்தினார். கூக்குரலிட்ட நேஹா சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்த சிலர், விகாஸின் தாய்க்கு தகவல் கொடுத்தனர். அவர், சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நேஹாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தகவலறிந்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட கணவர் விகாஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சம்பவம் நடந்த போது, தம்பதியர் மது போதையில் இருந்தனர்.
மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது மனைவியை கத்தியால் குத்தினார். தற்போது அவரது மனைவி ஆபத்தான நிலையில் உள்ளார்’ என்றும் கூறினர்.