Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பழகிய பெண் திடீரென விட்டு சென்றதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு! திருமணமானது தெரிந்ததும் நீங்கியதால் நேர்ந்த சோகம்! 

#image_title

பழகிய பெண் திடீரென விட்டு சென்றதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு! திருமணமானது தெரிந்ததும் நீங்கியதால் நேர்ந்த சோகம்! 

தன்னுடன் பழகிக் கொண்டிருந்த பெண் திடீரென விலகிச் சென்றதால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாலிபருக்கு திருமணம் ஆனது தெரிந்ததும் அந்தப் பெண் விலகிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த  சம்பவம் குறித்து கூறப்படுவதாவது,

இந்த சோக நிகழ்வானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. நீண்ட நாட்களாக பழகி வந்த பெண் திருமணம் ஆன செய்தி தெரிந்ததும் விலகிப் போனதால் வாலிபர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார்.

உத்திர பிரதேசம் மாநிலம் பல்லியாவைச்  சேர்ந்தவர் 32 வயது வாலிபர். ஏற்கனவே திருமணம் ஆன இந்த வாலிபர் ஒரு பெண்ணுடன் உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் அந்தப் பெண்ணிற்கு வாலிபருக்கு திருமணமான செய்தி தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் வாலிபரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

உறவை தொடர அந்த வாலிபர் வற்புறுத்தவே, திருமணமாகி குழந்தை இருப்பதால் உறவை மேலும் தொடர அந்தப் பெண் மறுத்து விலகி விட்டார். இதனால் மிகுந்த சோகத்தில் இருந்து வந்த அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதன்கிழமை அன்று அவரது உடலானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்த அவரின் உடலின் அருகே தற்கொலை கடிதமும் பூச்சி மருந்து பாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டது என்று துணை காவல் கண்காணிப்பாளர் முகமது ஃபஹீம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக அந்தப் பெண் மீது வாலிபரின் மாமா வழக்கு தொடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version