Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கணவனின் அந்த உறுப்பில் கொதிக்க கொதிக்க வெந்நீர் ஊற்றிய மனைவி!..

கணவனின் அந்த உறுப்பில் கொதிக்க கொதிக்க வெந்நீர் ஊற்றிய  மனைவி!..

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சேர்ந்தவர் தான் பிரியா. இவர்கள் இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு மகனும் ஒரு வயதில் ஒரு மகளும் இருக்கின்றார்கள். தங்கராஜ் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்திருந்தார். அப்போது அந்த கம்பெனியில் ஒரு பெண்ணிடம் நட்பாக பழகி வந்தார்.

அந்த நட்பு  காலபோக்கில் கள்ளக்காதலாக மாறியது. தங்கராஜ் அவ்வப்போது கம்பெனியில் லீவு எடுத்து அந்த பெண்ணை சந்திக்க சென்று வந்துள்ளார்.இப்படியே அவரது கள்ளக்காதல் தொடர்ந்தது.இதனை ஒரு நாள் தன் மனைவி பிரியா கண்டு பிடித்தார்.

நடந்த எல்லாவற்றையும் கண்டுபிடித்து கணவரை கண்டித்துள்ளார். கள்ளக்காதலை விடாமல்  மறுத்த கணவன் உரத்த குரலில் திட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனாலேயே இவர்களுக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த நாளன்று தங்கராஜ் கம்பெனிக்கு சென்று மாலையில் வீடு திரும்பினார். இரவு வேலை உணவை சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றுள்ளார். தூங்கியதை அறிந்த மனைவி பிரியா ஒரு குக்கரில் தண்ணீரை கொதிக்க வைத்துள்ளார்.

நள்ளிரவு ஒரு மணி ஆகியது. அச்சமயம் பார்த்து கொதிக்கும் வெந்நீரை தங்கராஜ் மர்ம உறுப்பில் ஊற்றியுள்ளார்.இதனால் அலறி அடித்துக் கொண்டு எழுந்த தங்கராஜ் வலி தாங்காமல் கத்தியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர்  அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால்  மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலை அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து பிரியாவை கைது செய்தனர்.

மேலும் இச்சம்பவம் பற்றி பிரியாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையின் மூலம் பிரியா கூறியதாவது, எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் போது வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்துள்ளார்.

கணவர் சம்பாதிக்கும் பணமெல்லாம் அந்த கள்ளக்காதலிக்கு செலவழித்து வந்தார்.அதை தட்டி கேட்டால் எனக்கு அடி உதை தான் விழுகிறது. கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழிக்கேற்ப கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவருக்கு நூதன தண்டனை கொடுக்க முடிவு செய்தேன் என்று அதற்காகத்தான் கொதிக்க கொதிக்க வெந்நீரில் அந்த இடத்தில் ஊற்றினேன் என்றார்.

இனிமேல் அவரால் கள்ளக்காதலையுடன் உல்லாசம் அனுபவிக்க முடியாது. கள்ளக்காதல் கொண்டுள்ள கணவர்களுக்கு இதுவே ஒரு பாடம் என்று அவர் கூறினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Exit mobile version