வெள்ளவேடு அருகில் இருக்கின்ற கூடப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் என்றால் மற்றும் பவுசியா ஆகிய தம்பதியருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இம்ரான் அத்திப்பட்டு அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக அவருடைய மனைவி அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு அதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அதேபோல இரண்டு நாட்களுக்கு முன்னர் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. அந்த சமயத்தில் ஆத்திரமடைந்த பவுசியா கணவன் இம்ரான் தூங்கிய பின்னர் மிக பயங்கர செயல் ஒன்றை செய்திருக்கிறார்.
அதாவது இம்ரான் இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் பவுசியா கொதிக்கும் தண்ணீரை இம்ரான் பிறப்புறுப்பின் மீது வெந்தநீரை ஊற்றி இருக்கிறார். இதனால் கதறித் பிடித்திருக்கிறார் இம்ரான் அதோடு அவருக்கு படுகாயம் உண்டாகியிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து இம்ரானை அவர்களை அங்கிருந்தோர் உடனடியாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளவேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
கணவன் நடத்தை மீது சந்தேகம் கொண்ட மனைவி செய்த கொடூர செயல்!
