தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!!

0
65
#image_title

தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சார்ஜ் போட்டபடியே செல் போன் பேசிய பெண் ஒருவர் செல்போன் வெடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விசித்திர ராஜபுரத்தில் 32 வயதான கோகிலா என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய கணவர் பிரபாகர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் தனது 9 வயது மகன் பிரகதீஷ் என்பவருடன் வசித்து வருகிறார்.

இவர் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் கடிகாரம் மற்றும் செல்போன் சரிசெய்யும் கடை நடத்தி வருகின்றார். வழக்கம் போல இன்றும்(செப்டம்பர்27) கடைக்கு வந்த கோகிலா அவர்கள் கடையில் தனது பணிகளை தொடங்கினார்.

இதையடுத்து கோகிலா அவர்கள் கடையில் சார்ஜ் போட்டபடியே செல்போனில் பேசியுள்ளார். அப்போது மின் கசிவு ஏற்பட்டு செல்போன் வெடித்து சிதறியது. இதில் கடை முழுவதும் தீ பற்றியது.

தீயானது கடை முழுவதும் மலமலவென்று பற்றி எரியத் தொடங்கியது. கடைக்குள் இருந்த கோகிலா கூச்சலிட்டார். கோகிலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர் இருந்தாலும் இந்த தீ விபத்தில் சிக்கிய கோகிலா அவர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் காவல் துறையினர் கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய கோகிலா அவர்கள் செல்போன் வெடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.