செய்த பாவங்கள் அனைத்தும் நீங்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!

0
212
#image_title

செய்த பாவங்கள் அனைத்தும் நீங்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!

முன் ஜென்ம பாவங்கள், தோஷங்கள் நீங்க காலபைரவர் வழிபாடு செய்வது நல்லது. இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை நாளில் பிரம்ம முகூர்த்த செய்ய வேண்டும். ஒருவேளை பிரம்ம முகூர்த்ததில் செய்ய முடியாவதர்கள் காலை 6:30 – 7:30க்குள் செய்யலாம்.

காலபைரவர் வழிபாடு செய்ய முதலில் தாளிக்காத மற்றும் உப்பு சேர்க்காத தயிர் சாதத்தை தயார் செய்து கொள்ளவும். இதை பூஜை அறையில் உள்ள தெய்வத்திற்கு படைக்கவும். அடுத்து 5 தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். அதற்கு முதலில் 5 விளக்கு எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்துக் கொள்ளவும்.

பின்னர் நெய், நல்லெண்ணெய், இலுப்பை, தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியஐந்து எண்ணெய்களை கலந்து விளக்கில் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றவும். இந்த தீபம் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். பின்ன தீபத்திற்கு முன் அமர்ந்து “ஓம் கால பைரவாய நமக” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி தீபாராதனை காட்டவும். பூஜை முடிந்த பிறகு நெய்வேத்தியத்தை பகிர்ந்து உண்ணலாம்.

இந்த தீபம் குறைந்தது 1/2 மணி நேரம் வரை அணையாமல் எரிய வேண்டும். இவ்வாறு மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அன்று செய்து வந்தால் நீங்கள் செய்த பாவம் அனைத்தும் நீங்கிவிடும்.