இயற்கை முறையில் 5 நிமிடத்தில் BPக்கு தீர்வு இருக்கு..!

0
292
#image_title

இயற்கை முறையில் 5 நிமிடத்தில் BPக்கு தீர்வு இருக்கு..!

அதிகப்படியான கோபம், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு அதாவது BP ஏற்படுகிறது. இந்த BP செலவின்றி இயற்கை முறையில் கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் பொருட்கள்…

*கடுக்காய்
*சீரகம்

கடுக்காய்…

இதில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றது. வாதம், பித்தம், கபம் உள்ளிட்ட பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது. அதுமட்டும் இன்றி குடல் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.

சீரகம்…

செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது. இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

ஒரு கடுக்காயை உரலில் போட்டு இடித்து அதன் தோலை நீக்கவும். பிறகு அதில் உள்ள விதையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அடுத்து அதில் 1 ஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து கொள்ளவும். பிறகு 200 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

பிறகு ஆறவைத்து ஒரு கிளாஸில் வடிகட்டி காலை உணவு உட்கொண்ட பிறகு குடிக்கவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

தேவைப்படும் பொருட்கள்…

*முருங்கை இலை
*மஞ்சள்
*பூண்டு
*உப்பு

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 1/4 கப் முருங்கை இலை, சிட்டிகை அளவு மஞ்சள் தூள், 1 பல் இடித்த பூண்டு மற்றும் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து காய்ச்சி குடித்தால் உயர் இரத்த அழுத்தம் குணமாகும்.