Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர்களின் அரசியல் குறித்த முதல்வரின் கருத்து குறித்து திருமாவளவன்

நடிகர்களின் அரசியல் குறித்த முதல்வரின் கருத்து குறித்து திருமாவளவன்

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் திரையுலகை சேர்ந்தவர்கள் குறிப்பாக நடிகர்கள், நடிகைகள் அரசியலுக்கு வருவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் பெரும்பாலான நடிகர்கள் வந்த வேகத்தில் மீண்டும் அரசியலைவிட்டு திரும்பி சென்று விடுகின்றனர். அல்லது மக்களின் ஆதரவு இன்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நடிகர்களின் அரசியல் இனி எடுபடாது என்று தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள், ‘இன்றைய சூழலில் அரசியல் விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது. நடிகர்களுக்கு அரசியலில் எந்த அளவு முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்று நான் கருதுகிறேன். எம்ஜிஆர் அவர்களை போல் பெரிய தாக்கத்தை இன்றைய நடிகர்கள் ஏற்படுத்த முடியாது என்ற முதல்வரின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்’ என்று தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திருமாவளவன் கூறியதுபோல் இதுவரை அரசியலுக்கு வந்த பெரிய நடிகர்களான விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன், சிரஞ்சீவி, பவன்கல்யாண், உள்பட எந்த நடிகர்களும் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறையை ரஜினிகாந்த் அவர் போக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Exit mobile version