Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி ஆபரேஷன் இல்லாமலேயே மூல நோயை குணப்படுத்த இந்த 1 இலை போதும்!!

#image_title

இனி ஆபரேஷன் இல்லாமலேயே மூல நோயை குணப்படுத்த இந்த 1 இலை போதும்!!
மூல நோயை குணப்படுத்த துத்தி இலைகளை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் என்றா இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
துத்தி இலையை பயன்படுத்தும் முறைகள்…
1. மூல நோய் உள்ளவய்கள் நான்கு அல்லது ஐந்து துத்தி இலைகளை பறித்து கழுவி சுத்தம் செய்து அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இது மூலநோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
2. அவ்வாறு சாப்பிடப் பிடிக்காதவர்கள் துத்தி இலைகளை பறித்து உரலில் போட்டு அதில் அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு இடித்துக் கெள்ளவும். அதை கையில் எடுத்து பிழிந்து துத்தி இலைகளின் சாறு எடுத்துக் கெள்ளவும். இந்த சாறை அப்படியே குடிக்கலாம்.
3. துத்தி இலைகளின் சாறு குடிக்க பிடிக்காதவர்கள் அந்த துத்தி இலைச் சாறு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் அரை ஸ்பூன் அளவு மஞ்சள் சேர்த்து இரவில் மூல நோய் உள்ள பகுதியில் இந்த மருந்தை தேய்த்து விட்டு படுக்கலாம்.
4. ஐந்து அல்லது ஆறு துத்தி இலைகளை எடுத்து நன்கு சுத்தமாக பூச்சி புழு இல்லாத அளவிற்கு கழுவி ஒரு மிக்சி ஜாரில் போட்டுக் கெள்ளவும். பிறகு இதில் கால் ஸ்பூன் சீரகம், கால் கப் அளவு தயிர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மோர் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை நன்கு வடிகட்டி எடுத்து பிறகு அப்படியே குடிக்லாம். மலம் கழிக்கும் பொழுது இரத்தம் வருதல், வலி ஏற்படுதல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
5. தயிர் இல்லாத பட்சத்தில் ஒரு மிக்சி ஜாரில் சுத்தம் செய்த துத்தி இலைகளை போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து இதை வடிகட்டி குடிக்கலாம். இதுவும் மூல நோய்க்கு சிறந்த தீர்வை கொடுக்கும்.
6. மூல நோய் உள்ளவர்கள் சாதம் வடித்த தண்ணீரில் இந்த துத்தி இலைகளை அரைத்து கலந்து குடிக்கலாம்.
7. மூல நோய் உள்ளவர்கள் துத்தி இலைகளை பருப்போடு சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
மூலநோய் உள்ளவர்கள் கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நிறைய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காய்கறி பழங்கள் இதையெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Exit mobile version