பைல்ஸ் 1 நாளில் குணமாக இந்த மூலிகை வைத்தியம் தான் பெஸ்ட்!

0
153
#image_title

பைல்ஸ் 1 நாளில் குணமாக இந்த மூலிகை வைத்தியம் தான் பெஸ்ட்!

நீண்ட காலம் மலச்சிக்கல் பாதிப்பு இருந்தால் மூல நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இந்த மூல நோய் பாதிப்பு வந்துவிட்டால் மலத்துடன் இரத்த கசிவு, ஆசனவாய் பகுதியில் அரிப்பு, எரிச்சல் உணர்வு, இரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

மூல நோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்து கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இதை சரி செய்ய மூலிகை வைத்தியத்தை முயற்சிக்கவும். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*சுண்டைக்காய்
*வெங்காயம்
*பூண்டு
*நெய்

செய்முறை…

முதலில் 10 சுண்டைக்காயை எடுத்து உரலில் போட்டு இடித்து கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 ஸ்பூன் பசுமாட்டு நெய் ஊற்றி சூடானதும் இடித்து வைத்துள்ள சுண்டைக்காயை போட்டு வதக்கி கொள்ளவும்.

அடுத்து அதில் 3 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி சேர்க்கவும். அதனுடன் 3 பல் பூண்டை தோல் நீக்கி நறுக்கி சேர்த்து மிதமான தீயில் வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலம், மலசிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் நிரந்தரமாக குணமாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*மூக்குத்தி பூ செடி இலை – 1/2 கைப்பிடி அளவு
*மிளகு – 4

செய்முறை…

முதலில் மூக்குத்தி பூ செடி இலை 1/2 கைப்படி அளவு எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு உரலில் இந்த இலையை போட்டு அதனுடன் 4 மிளகை சேர்த்து இடித்து விழுதாக்கி கொள்ளவும்.

இந்த விழுதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.