இது முழுக்க முழுக்க கேவலமான செயல்!!! கோபத்துடன் மாறிவிட்ட நடிகை சாய் பல்லவி!!!

0
158
#image_title

இது முழுக்க முழுக்க கேவலமான செயல்!!! கோபத்துடன் மாறிவிட்ட நடிகை சாய் பல்லவி!!!

நடிகை சாய் பல்லவி அவர்களுக்கும் இயக்குநர் ராஜ்குமார் அவர்களுக்கும் திருமணம் ஆனது போல புகைப்படங்களை எடிட் செய்து வதந்தி பரப்பியதை கண்டித்து நடிகை சாய்பல்லவி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சாய் பல்லவி தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்கே21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ரங்கன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தயாரிக்கிறார்.

இதையடுத்து எஸ்கே21 திரைப்படத்திற்கான பட பூஜையில் நடிகை சாய் பல்லவி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தார். நடிகை சாய் பல்லவி பகிர்ந்த புகைப்படத்தில் நடிகை சாய் பல்லவி அருகே இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அவர்களும் மாலை அணிந்த படி நின்று கொண்டிருந்தார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை சாய் பல்லவி மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இருவரையும் தனியாக பிரித்து இருவருக்கும் திருமணம் ஆனது போல எடிட் செய்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் இந்த புகைப்படம் குறித்து நடிகை சாய் பல்லவி அவர்கள் கண்டிப்புடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை சாய் பல்லவி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் “நான் வதந்திகளைப் பற்றி இப்பொழுது கவலைப்படுவது இல்லை. ஆனால் அது என் குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கி இருப்பதால் நான் இங்கு பேச வேண்டிய சூழல் உண்டாகி இருக்கின்றது.

எஸ்கே21 திரைப்படத்தின் பூஜையின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மிகவும் வேண்டுமென்றே எடிட் செய்து பரப்பி உள்ளார்கள். என்னுடைய அடுத்தடுத்த பணிகளை பற்றிய அறிவிப்பை வெளியிடும் இந்த வேலையில் நான் இது போன்ற வதந்திகளுக்கு விளக்கம் அளிப்பது எனக்கு வருத்தம் தருகின்றது. இது போன்ற அசௌகரியத்தை ஏற்படுத்தும் வேலைகள் முழுக்க முழுக்க முற்றிலும் கேவலமான செயல்” என்று குறிப்பிட்டுள்ளார்.