தொடர்ந்து தோற்கடிக்கப்படும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ரத்து செய்யப்பட்ட தேர்தல்! கனவுகள் கலைந்த வேதனையில் வேட்பாளர்கள்!

0
100

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கின்ற கடம்பூர் ஊராட்சியாக இருந்த கடம்பூர் 1975ஆம் ஆண்டு முதல் நிலையில் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கிருக்கின்ற பேரூராட்சியில் 12 வார்டுகள் இருக்கின்றன. இதில் 1605 ஆண் வாக்காளர்கள், 1690 பெண் வாக்காளர்கள் என்று சுமார் 3,795 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஊராட்சி தேர்தலிலும் இங்கிருக்கின்ற மக்கள் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக எந்தவிதமான சாதிய மோதல்களும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ,அனைத்து சமூகங்களைச் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து சுயேச்சையாக போட்டியிடுவது வழக்கமாகயிருந்து வருகிறது.

அனைத்து சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு தேர்தலின் போதும் இதனை நடைமுறையாக கொண்டிருக்கிறார்கள். பல கட்சிகளில் இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலின்போது அவர்கள் களமிறங்குவது வழக்கம்.

அவர்கள் எல்லோருமே போட்டியின்றி தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றுக் கொண்டார்கள் இதனை கருத்தில் வைத்து பல தேர்தல்களில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் இங்கேயே வேட்பாளர்களை நிறுத்தியதில்லை என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு நிறுத்தினாலும் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது மிகக் கடினம்.

சென்ற 2011ம் ஆண்டு முதன்முதலில் அதிமுகவும் புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டார்கள். ஆனாலும் அவை வெற்றி பெற இயலவில்லை. அனைத்து சமூக மக்களால் ஒருங்கிணைந்து தேர்வு செய்யப்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றார்கள்.

அதோடு கடம்பூரிலிருக்கின்ற ஜமீன்தார் குடும்பத்தை சார்ந்தவர்களில் ஒருவரும் பேரூராட்சி தலைவராகவும், மற்ற சமூகங்களை சார்ந்தவர்களின் ஒருவர் துணை தலைவராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்கள். இதற்கிடையில் 2 முறை தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்களும் தலைவராக இருந்து வந்திருக்கிறார்கள்.

இவ்வாறான நிலையில், தான் தற்சமயம் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அந்த பகுதியில் களம் இறங்கியிருக்கின்றன. அதிமுக வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.

திமுக 10 வேட்பாளர்கள், காங்கிரஸ் 1 வேட்பாளர், மதிமுக வேட்பாளர், பாஜக வேட்பாளர் மற்றும் 20 சுயேச்சை வேட்பாளர்கள் என்று ஒட்டுமொத்தமாக 33 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்கள். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுரேஷ்குமார் உதவி தேர்தல் அலுவலர்களாக வெள்ளைச்சாமி, சூசை மரியானன் உள்ளிட்டோர் பணியாற்றி வந்தார்கள்.

சென்ற 6 ஆம் தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையில் 1-வது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்ட ஜெயராஜ், 2வது வார்டு திமுக சார்பாக போட்டியிட்ட சண்முக லட்சுமி, 11-ஆவது வார்டு திமுக சார்பாக போட்டியிட்ட சின்னத்துரை, உள்ளிட்டோர் வேட்புமனுக்களில் முன்மொழிந்தவர் கையெழுத்தை போலியாக உள்ளதாக 3 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

திமுகவின் 3 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக, அவர்களை எதிர்த்து நின்ற 3 சுயேச்சை வேட்பாளர்கள் நாகராஜா, ராஜேஸ்வரி, சிவகுமார், உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு நடுவில் கடம்பூர் பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலரான சுரேஷ்குமார் வெளியே சென்று விட்டு காரில் அலுவலகம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது அலுவலகம் முன்பு திடீர் என்று மயங்கி விழுந்தார்.

காவல்துறையினர் அவரை மீட்டு காரில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதற்கிடையில் நேற்று முன்தினம் 9வது வார்டில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த திமுக மாற்று வேட்பாளர் சாந்தி மட்டும் வாபஸ் பெற்றிருந்தார். இதன் காரணமாக, 9வது வருடங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக நோட்டீஸ் போர்டில் அதிகாரிகள் ஓட்ட முயற்சி செய்தார்கள்.

1,2 மற்றும் 11வது வார்டு தொடர்பாக எந்தவிதமான அறிவிப்பும் ஓட்டப்படவில்லை என்பதால் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

1,2,11 உள்ளிட்ட வாரங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 3 சுயேட்சை வேட்பாளர்களுக்கும் அதற்கான சான்றிதழை வழங்க வலியுறுத்தி திடீரென்று பேரூராட்சி அலுவலகம் முன்பு சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த சூழ்நிலையில், நள்ளிரவில் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றவில்லை என்ற காரணத்தால், தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதன் காரணமாக, களத்தில் நின்ற வேட்பாளர்களும் கடம்பூர் பகுதி மக்களும் கடுமையான அதிர்ச்சியில் இருக்கிறார்கள். பல ஆண்டு காலமாக எந்த அரசியல் கட்சிகளினால் தங்கள் பகுதியில் மக்கள் ஒற்றுமை குலைந்து போய் விடக்கூடாது என்று நினைத்தார்களோ அது இந்த தேர்தலில் நடந்து விட்டதாகவும், மக்கள் வேதனைப்பட்டு வருகிறார்கள்.

இந்த பகுதியில் அரசியல் காட்சிகளில் பலர் இருந்தாலும் கூட சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அவர்கள் சார்ந்த கட்சிக்கு ஆதரவாக பணி புரிவதும், வாக்களிப்பதும், வழக்கம். ஆனாலும் பேரூராட்சி தேர்தல் என்று வரும்போது கட்சியில் இருப்பவர்கள் சுவடுகளாக போட்டியிட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக, இன்று முன்மொழிந்தவர்கள் கையெழுத்து போலி என்று நிரூபிக்கப்பட்டதால் சிலர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நியாயமான முறையில் அமைதியாக இருந்த ஊரை பதற்றமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கிறார்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள்.