Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமைச்சர் செங்கோட்டையன் ஏன் இப்படிச் செய்தார்? மாணவர்களே தெரிந்து கொள்ளுங்கள்!

அமைச்சர் செங்கோட்டையன் ஏன் இப்படிச் செய்தார்? மாணவர்களே தெரிந்து கொள்ளுங்கள்!

பள்ளிக் குழந்தைகளே! தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே படியுங்கள்!

ஆம், இனி நமது பள்ளி மாணவர்கள் தொலைக்காட்சியைப் பார்த்து பாடம் கற்கலாம். தமிழக அரசானது கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளைச் சீறிய முறையில் செய்து வருகிறது. அதன் ஒருபடியாக ஆரம்பிக்கப்பட்டது தான் பள்ளி மாணவர்களுக்கான “கல்வித் தொலைக்காட்சி”.

மாணவர்கள் வகுப்பறைக்கற்றல் முறை மற்றும் புத்தகங்களைப் பார்த்து படிக்கும் முறைகளைத் தாண்டி காணொளிக் காட்சிகள் மூலம் படிக்கும் போது அவர்களின் கற்றல்திறன் மேம்படும் என்ற ஆராய்ச்சிப்பூர்வமான தரவுகளின் அடிப்படையில் தொடங்கப்பட்டதே இந்தக் கல்வித் தொலைக்காட்சி ஆகும்.

இந்த மாதிரியான கற்றல் முறைகள் ஏற்கனவே பல்வேறு வளர்ந்த நாட்களில் நடைமுறையில் கொண்டுவரப்பட்டு வெற்றியும் அடைந்துள்ளது குறிப்பித்தக்கது ஆகும்.

ஆக, ஏற்கனவே சோதனை முறையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கல்வித்தொலைக்காட்சி இன்றுமுதல் அதிகாரப்பூர்வமாக அரசு கேபிள் நிறுவனத்தால் ஒளிபரப்பப்படும். இந்த தொலைக்காட்சி சேனலை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் விழாவில் துவங்கிவைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்ற அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Exit mobile version