Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு

TN Govt Anounced Veda Nilayam to become Jayalalithaa memorial

TN Govt Anounced Veda Nilayam to become Jayalalithaa memorial

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரிடப்பட்ட பங்களா வீட்டில் தான் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார்.  அவரது மறைவுக்கு பின்னர் அவர் வாழ்ந்த அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து ஜெயலலிதா வசித்து வந்த இல்லத்தை நினைவிடமாக்குவதற்கான நடவடிக்கைகளை கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழக அரசு  மேற்கொண்டு வந்தது.  இந்த நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற  ஆளுநர் ஒப்புதலுடன் தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இதன் மூலமாக வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது.

Exit mobile version