Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த நோய்களை குணப்படுத்த.. தினமும் ஒரு செம்பருத்தி பூவை இப்படி சாப்பிடுங்கள்!!

அழகு நிறைந்த பூவான செம்பருத்தி சிறந்த மருத்துவ குணமிக்க பூவாக திகழ்கிறது.இந்த செம்பருத்தி பூவில் பானம் செய்து பருகி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலில் உள்ள நோய்களை மருந்து மாத்திரை இன்றி வீட்டில் வளரும் செம்பருத்தி செடி பூவை வைத்து குணப்படுத்திக் கொள்ளலாம்.

செம்பருத்தி பூ நன்மைகள்:

1)தினமும் ஒரு செம்பருத்தி பூவின் இதழை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.

2)இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் செம்பருத்தி பூ இதழை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

3)செம்பருத்தி பூவில் இருக்கின்ற வைட்டமின்கள் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.முடி உதிர்வை கட்டுப்படுத்த தினமும் ஒரு செம்பருத்தி பூவில் தேநீர் செய்து குடிங்க.

4)சருமம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் குணமாக செம்பருத்தி இதழை சாப்பிடுங்கள்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செம்பருத்தி இதழை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

5)இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள செம்பருத்தி பூ இதழை தினமும் சாப்பிட்டு வரலாம்.

6)உடலில் உள்ள சூடு குறைய செம்பருத்தி இதழை பொடியாக நறுக்கி தேன் சேர்த்து சாப்பிடலாம்.

7)பெண்கள் மாதவிடாய் வலியை குறைக்க செம்பருத்தி இதழ் தேநீர் செய்து பருகலாம்.

8)சிறுநீரகத்தில் தேங்கி இருக்கும் நஞ்சு கழிவுகள் வெளியேற செம்பருத்தி இதழ் தேநீர் செய்து பருகலாம்.

9)செம்பருத்தி பூவை காயவைத்து பொடித்து பாலில் கலந்து பருகி வந்தால் உடல் சோர்வு நீங்கும்.

10)தோல் பிரச்சனைகள் அகல செம்பருத்தி பூ பானம் செய்து பருகி வரலாம்.உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் செம்பருத்தி பூ தேநீர் செய்து பருகி வந்தால் அவை சீக்கிரம் குணமாகும்.

Exit mobile version