Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெறும் 5 நிமிடத்தில் மொத்த நரைமுடியும் கருமையாக மாற.. தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை சேருங்கள்!!

narai mudi karumaiyaka mara tips

narai mudi karumaiyaka mara tips

முதுமை காலத்திலும் தலைமுடி அடர் கருமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் 30 வயது கடந்தாலே அனைவருக்கும் முடி நரைத்துவிடுகிறது.எனவே இயற்கையான முறையில் நரைமுடியை கருமையாக்க இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்துங்கள்.

 

தேவையான பொருட்கள்:

 

1)தேங்காய் எண்ணெய் – ஒரு லிட்டர்

2)மருதாணி இலை – ஒரு கைப்பிடி அளவு

 

பயன்படுத்தும் முறை:

 

*அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

 

*பிறகு அதில் ஒரு கைப்பிடி மருதாணி இலையை போட்டு கொதிக்க வையுங்கள்.

 

*தேங்காய் எண்ணெய் நிறம் மாறும் வரை சுண்டக் காய்ச்சி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

 

*பின்னர் இந்த தேங்காய் எண்ணெயை ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

 

*இந்த எண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து பராமரித்து வந்தால் வெள்ளை முடி கருமையாவதோடு முடி உதிர்வு பிரச்சனை சரியாகும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)அவுரி இலை – ஒரு கப்

2)தேங்காய் எண்ணெய் – அரை லிட்டர்

3)பெரிய நெல்லிக்காய் – ஐந்து

 

பயன்படுத்தும் முறை:

 

*அடுப்பில் இரும்பு வாணலி வைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

 

*பிறகு ஐந்து பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

*பிறகு ஒரு கப் அவுரி இலையை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

 

*இந்த எண்ணெயை நன்றாக ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி தலைக்கு பயன்படுத்தி வந்தால் வெள்ளை முடி அனைத்தும் அடர் கருமையாக மாறும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி

2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி

 

பயன்படுத்தும் முறை:

 

*அடுப்பில் வாணலி வைத்து 250 தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.

 

*பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு காய்ச்சி ஆறவிட்டு தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வு மற்றும் வெள்ளைமுடி பிரச்சனை சரியாகும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)விளக்கெண்ணெய் – அரை லிட்டர்

2)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி

 

பயன்படுத்தும் முறை:

 

*இரும்பு வாணலி ஒன்றில் அரை லிட்டர் விளக்கெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

 

*பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பிறகு தலைக்கு தடவி வந்தால் வெள்ளை முடி அடர் கருமையாக மாறும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)தேங்காய் எண்ணெய் – 25 மில்லி

2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

 

பயன்படுத்தும் முறை:

 

*கிண்ணத்தில் 25 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் நரைமுடி அனைத்தும் கருமையாக மாறும்.

Exit mobile version