Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பருவமழை எதிரொலி: தமிழகத்தின் இந்த 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை! வானிலை மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு!

பருவமழை எதிரொலி: தமிழகத்தின் இந்த 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை! வானிலை மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு!

சனிக்கிழமை தொடங்கிய பருவமழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மீதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது.இந்நிலையில் வடகிழக்கு பருவமழை இன்றையிலிருந்து தீவிரமடைய தொடங்கியுள்ளது.இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் சற்று முன் அறிவித்துள்ளது.

அதன்படி கீழ்கண்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை செங்கல்பட்டு நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வரும் நிலையில்,விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி வேலூர் திருப்பத்தூர் தஞ்சாவூர் திருவாரூர் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Exit mobile version