இந்தியாவில் புதிய உச்சத்தை அடைந்துள்ள கொரோனா தொற்று!!

0
113

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 77,266 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,87,500 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,057 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 61,529 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 60,177 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 25,83,948 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக 7,42,023 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.