Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் இன்று 97 பேர் உயிரிழப்பு… 5,975 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,79,385 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 97 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 6,519 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 6,047 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் எண்ணிக்கை 3,19,327 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,127 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,63,624 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,25,389ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version