Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விளையாடி கொண்டிருந்த மூன்று வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

tragedy-happened-to-a-three-year-old-child-who-was-playing-death-without-treatment

tragedy-happened-to-a-three-year-old-child-who-was-playing-death-without-treatment

விளையாடி கொண்டிருந்த மூன்று வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே செம்மனாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்கண்ணன.இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருடைய மனைவி சிவகாமி ,இவர்களுக்கு தீபா ,மோனிகா என்ற மகள்கள்  உள்ளனர்.மேலும் இவர்களுக்கு மூன்று வயதில் வெற்றிவேல் என்ற மகனும் உள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வெற்றிவேல் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தார்.அப்போது வெற்றிவேலின் கையில் செந்தேள் கடித்துள்ளது.

அந்நிலையில் வெற்றிவேல் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார்.அதனை கண்ட அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து வெற்றிவேலின் உறவினர் வடமதுரை போலீஸில்  புகார் அளித்தார்.அந்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version