Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரசப்பொடி இந்த முறையில் செய்து பாருங்கள்!! வாசனை ஊரையே கூட்டும்!!

#image_title

ரசப்பொடி இந்த முறையில் செய்து பாருங்கள்!! வாசனை ஊரையே கூட்டும்!!

நாம் அனைவரும் விரும்பி உண்ணும் ரசத்தின் சுவையை மேலும் கூட்ட வேண்டுமென்றால் வீட்டு முறையில் ரசப்பொடி செய்து பழகிக்கொள்ள வேண்டும்.இந்த ரசப்பொடியை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து ரசத்தில் சேர்தோம் என்றால் அவை மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி விதை – 1/2 கப்

*கடலை பருப்பு – 1/4 கப்

*துவரம் பருப்பு – 1/4 கப்

*கருவேப்பிலை – 1 கொத்து

*சீரகம் – 1/4 கப்

*கருப்பு மிளகு – 1/4 கப்

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*பெருங்காயம் – சிறிதளவு

*வரமிளகாய் – 8

செய்முறை:-

1)அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் மிதமான தீயில் கொத்தமல்லி விதைகளை சேர்த்து வாசம் வாசனை வரும் வரை வறுக்கவும்.கொத்தமல்லி கருகிடாமல் பார்த்து கொள்ளவும்.2 அல்லது 3 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வறுத்தால் போதும்.இதை ஒரு தட்டிருக்கு மாற்றி கொள்ளவும்.

2)பின்னர் அதே கடாயில் 1 கொத்து கருவேப்பிலை,மிளகு மற்றும் சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.2 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வறுத்தால் போதும்.இதை கொத்தமல்லி வறுத்து வைத்துள்ள அதே தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

3)மீண்டும் அதே கடாயில் கடலை மற்றும் துவரம் பருப்பை ஒன்றாகவே சேர்த்து வறுத்து தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.

4)தொடர்ந்து காரத்திக்கேற்ப வர மிளகாய் போட்டு வறுக்கவும்.பின்னர் அடுப்பை அணைக்க வேண்டும்.

5)அவை ஆறியப்பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் குழம்புக்கு உபயோகிக்கும் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி மற்றும் பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

6)பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.பின்னர் இதை காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளவும்.ரசப்பொடி இந்த முறையில் செய்தால் ரசம் மிகவும் சுவையாகவும்,அதிக வாசனையுடனும் இருக்கும்.

Exit mobile version