Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

5 நிமிடத்தில் ‘வாயு தொல்லை’ நீங்க இதை “துளசி + இஞ்சி போதும்”!!

#image_title

5 நிமிடத்தில் ‘வாயு தொல்லை’ நீங்க இதை “துளசி + இஞ்சி போதும்”!!

நம்மில் பெரும்பாலானவர்களை பாதித்து வரும் வாயு தொல்லையால் பொது வெளியில் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு இயற்கை வழிகளில் உரிய தீர்வு இருக்கிறது. இவற்றை செய்வதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் உடலை விட்டு வெளியேறி விடும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:-

*மலச்சிக்கல்

*செரிமானக் கோளாறு

*துரித உணவு

தேவையான பொருட்கள்:-

*துளசி – 1 கைப்பிடி அளவு

*இஞ்சி – 1 துண்டு

செய்முறை:-

முதலில் துளசி 1 கைப்பிடி அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதில் 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அலசவும். இப்படி செய்தால் துளசியில் ஒட்டி கிடந்த மண், பூச்சி உள்ளிட்டவை நீங்கி விடும்.

நன்கு சுத்தம் செய்த பின் ஒரு அம்மிக்கல்லில் போட்டு விழுது போல் அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதன் சாற்றை ஒரு பவுலில் பிழிந்து கொள்ளவும்.

அடுத்து இஞ்சி சிறு துண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பிறகு அதை ஒரு அம்மிக்கல்லில் போட்டு விழுது போல் அரைத்து அதன் சாற்றை ஏற்கனவே எடுத்து வைத்துள்ள துளசி சாற்றுடன் கலக்கவும். அம்மிக்கல் இல்லாதவர்கள் மிக்ஸி பயன்படுத்தி அரைக்கலாம்.

தயார் செய்து வைத்துள்ள இந்த சாற்றை குடித்த அடுத்த 5 நிமிடத்தில் உடலில் நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த கெட்ட வாயுக்கள் முழுவதும் வெளியேறி விடும். இந்த ரெமிடியை அவ்வப்போது செய்து பருகி வந்தோம் என்றால் ஆயுசுக்கும் வாயு தொல்லை இருக்காது.

Exit mobile version