Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தோ- சீனா பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்! இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கியது

பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கா களம் இறக்கிய இந்த போர்க்கப்பல் சீனாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா சீனா பிரச்சனையில் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம் என அமெரிக்கா நேற்று தெரிவித்துள்ளது.

சீனா தனது எல்லையில் இருக்கும் நாடுகள் மீது கடுமையான அத்து மீறல்களை மேற்கொண்டு வருகிறது.இதனை இனிமேலும் பொறுத்து கொள்ள முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது. சீனாவின் அத்து மீறல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தனது படைகளை ஆசியாவிற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது.

இதன் விளைவாகவே போர்க்கப்பல்கள் அமெரிக்காவால் இந்தோ பசிபிக் பெருங்கடல் பகுதியில் களம் இறக்கபட்டுள்ளது.
இதில் ஒரு போர்க்கப்பல் பிலிப்பைன்ஸ் எல்லைகளில் சுற்றி வருகிறது.இரண்டாவது கப்பல் பசுபிக் எல்லைப்பகுதியில் சுற்றி வருகிறது.மேலும் மூன்றாவது மற்றும் முக்கியமான போர்க் கப்பலான யு எஸ் எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் என்ற கப்பல் வியட்னாம் அருகே சுற்றி வருகிறது.

இந்தியா சீனா இடையில் போர் என்றால் இந்த யூ எஸ் எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் போர்க்கப்பல் சில மணிநேரங்களில் வங்கக்கடல் பகுதிக்கு செல்வதற்காக களமிறக்கபட்டுள்ளது.மேலும் இந்தக்கப்பல் தான் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகள் , அணு ஆயுதங்கள்,போர் விமானங்கள் ,நீர்மூழ்கி கப்பல்களை இதில் இருந்து இறக்க முடியும்.இந்த கப்பல் (USS Theodore Roosevelt) வங்கக்கடல் பகுதியில் இறக்கினால் இது இந்தியாவிற்கு பெரும் ஆதரவாக இருக்கும் என கூறப்படுகிறது.

Exit mobile version