தலைவலி 10 நிமிடத்தில் பறந்து போக மிளகை இப்படி யூஸ் பண்ணுங்க!!

0
139

தலை வலி என்பது அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனை ஆகும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தலை வலியால் பாதிக்கப்படுகின்றனர். இந்த தலை வலி நமக்கு ஏற்பட்டால் எந்நேரமும் கோபம் இருக்கும். இதனால் ஒருவர் நம்மிடம் சாதாரணமாக பேசக்கூட தயங்குவார்கள்.

மேலும் தலைவலி பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டால் வேறு எதாவது பிரச்சனையையும் இது ஏற்படுத்தும். எனவே தலைவலி பிரச்சனையை நாம் விரைந்து குணப்படுத்த வேண்டும். இதை குணப்படுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதை விட இயற்கையான முறையில் இருக்கும் சிகிச்சை முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் எளிமையான சிகிச்சை முறை ஒன்று பற்றி தற்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

* துளசி

* மிளகு

செய்முறை:

நமக்கு ஏற்படும் தலை வலியை குணப்படுத்த மிளகு மற்றும் துளசியை எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு செய்தால் போதும். தலை வலி இருக்கும் சமயங்களில் இதை செய்தால் தலைவலி விரைவில் குணமடையும். மேலும் தலைவலி ஏற்படாமல் தடுக்கலாம்