Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!!

#image_title

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!!

உடல் பருமன் என்பது இன்றைய காலத்தில் அனைவருக்கும் எளிதாக ஏற்பட்டு விடுகிறது.ஆரோக்கியமற்ற உணவு,தூக்கமின்மை,மன அழுத்தம்,வாழ்க்கை முறை,அதிக உணவு உட்கொள்ளுதல் ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதால் பல்வேறு நோய் பாதிப்புகள் நம்மை எளிதில் பாதித்து விடுகிறது.இந்த உடல் பருமனால் நமது அழகும் சேர்த்து கெடுகிறது.இதனை குறைக்க நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் எந்த ஒரு பயனும் ஏற்பட வில்லை என்பது தான் அனைவரின் கருத்து.ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை பாலோ செய்தால் நிச்சயமாக உடலில் தேங்கி கடந்த கொழுப்புகள் அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்.அதுவும் வெறும் 5 நாட்களில் இது நடக்கும் என்பது தான் தனி சிறப்பு.

தேவையான பொருட்கள்:-

*மிளகு – 15

*பட்டை – 1

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

1.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.

2.பிறகு 10 முதல் 15 என்ற அளவில் மிளகு எடுத்து ஒரு உரலில் இடித்து சூடாகி வரும் தண்ணீரில் சேர்க்கவும்.

3.அதனோடு சிறு பட்டை மற்றும் இடித்த சீரகம் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

4.இறுதியாக 1/2 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து 3 முதல் 5 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

5.அவற்றை ஒரு டம்ளருக்கு வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.

இந்த பானத்தை குடித்த அடுத்த 40 நிமிடங்களுக்கு எந்த ஒரு உணவையும் உண்ணக் கூடாது.தொடர்ந்து 5 நாட்களுக்கு எடுத்து வந்தோம் என்றால் உடலில் தொங்கி கிடைக்கும் கொழுப்பு கரைந்து விடும்.அதிக உடல் எடை கொண்டவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் மற்றும் இரவு தூங்குவதற்கு முன் இந்த பானத்தை எடுத்து வருவது நல்லது.

ஐந்து நாட்களுக்கு பிறகு இதனை பருக கூடாதா? என்று கேள்வி எழும்.5 நாட்கள் குடுத்தால் போதும்.தேவைப்பட்டால் 3 நாட்கள் இடைவேளைக்கு பிறகு இதனை மீண்டும் 5 நாட்களுக்கு குடிக்கலாம்.

Exit mobile version