Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மரவள்ளிக்கிழங்கை இப்படி பயன்படுத்தினால் BP-க்கு நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!!

Using tapioca like this will cure BP in minutes!!

Using tapioca like this will cure BP in minutes!!

உயர் இரத்த அழுத்தத்தால் அவதியடைந்து வருபவர்கள் மரவள்ளிக்கிழங்கை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை உள்ளிட்ட நோய் பாதிப்புகளை குணப்படுத்தும் மருந்தாக மரவள்ளிக்கிழங்கு திகழ்கிறது.

தேவையான பொருட்கள்:

1)மரவள்ளிக்கிழங்கு – ஒன்று
2)ஏலக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
3)தேங்காய் துருவல் – கால் கப்
4)சர்க்கரை – 50 கிராம்

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு மரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கிவிட்டு ஒரு காய்கறி சீவல் கொண்டு சீவிக் கொள்ள வேண்டும்.பிறகு மரவள்ளிக்கிழங்கில் இருந்து பாலை நன்கு பிழிந்துவிடவும்.

அதன் பிறகு மிக்சர் ஜாரில் ஒரு ஏலக்காய் மற்றும் இரண்டு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மூடி தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கிண்ணத்தில் சீவி வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கு,ஏலக்காய் தூள்,சர்க்கரை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

பிறகு அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.

சிறிது நேரம் கழித்து தண்ணீர் சூடானதும் அதில் இட்லி தட்டு வைத்து அதன் மேல் ஒரு காட்டன் துணியை பரப்பி விடவும்.பிறகு தயார் செய்து வைத்துள்ள மரவள்ளிக் கிழங்கை பரப்பி இட்லி பாத்திரத்தை மூடி 20 நிமிடங்களுக்கு வேகவிட வேண்டும்.

இவ்வாறு செய்தால் மரவள்ளிக்கிழங்கு பூ போல் வெந்து வந்துவிடும்.பிறகு இதை ஆவி பறக்க தட்டில் போட்டு ருசித்து சாப்பிடவும்.சுகர் இருப்பவர்கள் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.இந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

Exit mobile version