Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!! தமிழக அரசு உத்தரவு!!

Vaccination is mandatory for those coming from abroad!! Tamilnadu government order!!

Vaccination is mandatory for those coming from abroad!! Tamilnadu government order!!

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!! தமிழக அரசு உத்தரவு!!

மஞ்சள் காய்ச்சல், ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவில் அதிகமாக பரவி வருகிறது. மஞ்சள் காய்ச்சல் கொசுக்களின் மூலம் பரவக்கூடியது. இதுவும் ஒரு வகை தொற்றுநோய் ஆகும். மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அதிக காய்ச்சல், உட்புற ரத்தப்போக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாகின்றன.

தற்போது மஞ்சள் காய்ச்சல் அபாயம் அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இங்கிருந்து செல்பவர்களுக்கும் இது கட்டாயமாகும்.

மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டு 10 நாட்களுக்கு பிறகே அந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருவதோ அல்லது இங்கிருந்து அந்த நாடுகளுக்கு செல்லவோ வேண்டும். அந்த நாடுகளில் இருந்து தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் வருபவர்கள் 6 நாட்கள் வரை தனிமை படுத்தப் படுவார்கள்.

இந்தியாவில் இருந்து செல்பவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த தடுப்பூசி இந்தியாவில் 50 இடங்களில் போடப்படுகிறது. தமிழ்நாட்டின் 3 இடங்களில் போடப்படுகிறது.

Exit mobile version