வைகை புயல் வடிவேலுவின் தாயார் மறைவு! திரையுலகினர் இரங்கல்!
தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்து பெரிய அளவில் ரசிகர் பட்டளாத்தை கொண்டுள்ளவர் வைகைபுயல் வடிவேலு.இவர் மதுரையில் பிறந்தவர்.மேலும் இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு என் தங்கை கல்யாணி படத்தின் மூலம் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனவர்.ஆனால் தற்போது படிபடியாக முன்னேறி அவருடைய நகைச்சுவை நடிப்பினால் இன்றாளவும் ரசிகர்கள் மனதில் மிக பெரிய இடத்தை கொண்டுள்ளார்.
இந்நிலையின் நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி.அதிக வயது கொண்ட இவர் உடல் நலக்குறைவால் இருந்துள்ளார்.உடல் நிலை மோசம் அடைந்த காரணத்தால் நேற்று இரவு திடீரென காலமானார்.நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவு குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் வைகை புயல் வடிவேலுவின் தாயார் இறப்பிற்கு திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள்,உறவினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸ் அதிரடியாக தொடங்கி உள்ளார்.அந்தவகையில் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நத்துள்ளார்.மேலும் நாய் சேகர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.