பிரபல இயக்குநர் திடீர் தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

0
449
varushamellam vasantham director ravi shankar passed away
பிரபல இயக்குநர் திடீர் தற்கொலை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ரவிசங்கர் அவர்கள் சென்னையில் அவருடைய வீட்டில் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது தமிழ் சினிமா உலகத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இயக்குநர் ரவிசங்கர் அவர்கள் பாக்யா பத்திரிக்கையில் வெளிவந்த குதிரை என்ற சிறுகதையின் எழுத்தாளராக பணிபுரிந்தார். அதன் பின்னர் பிரபல இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் விக்ரமன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். பின்னர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான சூரியவம்சம் திரைப்படத்தில் இடம்பெற்ற “ரோஜாப்பூ சின்ன ரோஜாப்பூ” என்ற பாட்டை எழுதினார்.
இதையடுத்து ரவிசங்கர் அவர்கள் நடிகர்கள் குணால் மற்றும் மனோஜ் நடிப்பில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். மேலும் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல் வரிகளையும் அவரே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ரவிசங்கர் அவர்கள் சென்னையில் கேகே நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு(ஜூலை12) இயக்குநர் ரவிசங்கர் அவர்கள் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காவல் துறையினர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தது.
மேலும் அவருடைய தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 63 வயதான இயக்குநர் ரவிசங்கர் தற்கொலை செய்து கொண்டது தமிழ் திரையுலகில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடைய மறைவுக்கு ரசிகர்களும் திரைத் துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.