#Vettaiyan: ரஜினியின் படம் ரீலிஸாகுவதில் திடீர் சிக்கல்!! உயர்நீதிமன்றத்தில் தொடுத்த அவசர வழக்கு!! 

0
149
#Vettaiyan: Sudden trouble in Rajini's film release!! Urgent case filed in High Court!!

 

#Vettaiyan: ரஜினி தற்பொழுது வேட்டையன் படத்தில் கூறிய டயலாக்கை நீக்குமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

ரஜினியின் வேட்டையன் படமானது வரும் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு தான் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர், அமிதாப்பச்சன், பகத் பாஸில் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த படம் குறித்து எதிர்பார்ப்புகள் ட்ரைலர் மூலம் ரசிகர்களிடைடையே அதிகரித்துள்ளது. இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் ரஜினி நடித்துள்ளதால் ட்ரைலர் திரை வசனங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தற்பொழுது வேட்டையன் படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் இப்படத்தின் மீது உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லரில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாகானது சமூக நீதிக்கு எதிராக உள்ளது என கூறி மனு கொடுத்துள்ளனர். அதாவது அவர் ட்ரெய்லரில், “அநியாயம் நடக்கும் போது போலீஸ் அமைதியாக இருப்பதைவிட அதிகாரத்தை கையில் எடுக்கிறதில் தப்பில்லை” என கூறியிருக்கும் வசனத்தை அதிரடியாக நீக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இது வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கானது இன்றே விசாரணைக்கும் வரவுள்ளது.